![](admin/uploads/.60dfecc3ce2d60.79124242.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி: டில்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிவறையில், நேற்று காலை, கேட்பாரற்ற நிலையில் ஒரு பை கிடந்தது. பயணியர் அளித்த தகவலை அடுத்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் அதை சோதனையிட்டனர். பின், பையை திறந்து பார்த்த போது, அதில் தங்க கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு, 35 லட்சம் ரூபாய். அதை வீசிச்சென்றது யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.