![](admin/uploads/.60193f0cdf2ef9.35257383.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
`
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நட்சத்திர விடுதியில் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவல்லிக்கேணி வல்லபா அக்ரஹாரம் தெருவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கே விபச்சார தடுப்பு பிரிவு போலிசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 அறைகளில் வடமாநில இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நங்கநல்லூர் பி.வி. நகரை சேர்ந்த கார்த்திக் , மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சரவணன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், பாலியல் தொழிலுக்கு என தனியாக செல்போன் செயலி ஒன்று தொடங்கியதும் அதன் மூலம் இளைஞர்களை கவர்ந்து அவர்கள் கேட்கும் வயதில் பெண்களின் புகைப்படத்தை அனுப்பி பாலியல் தொழில் நடத்தியதும் தெரிய வந்தது. பெங்களூர், மேற்கு வங்காளம், ஆந்திரா பகுதிகளை சேர்ந்த 5 இளம்பெண்களை மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.