Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தாய்-மகளுக்கு அரிவாள் வெட்டு

ஜுலை 17, 2019 03:45

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பஸ் நிலையம் எதிரே வசித்து வந்தவர் முரளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி நாகம்மாள் (வயது 40). இவருக்கு பழனியம்மாள், மாரியம்மாள், பாரதி என்ற மகள்களும், முருகானந்தம் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நாகம்மாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இதையடுத்து கள்ளத் தொடர்பு பற்றி அறிந்த நாகம்மாளின் மகள்கள், ராஜேந்திரனை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் அவ்வப்போது குடிபோதையில் நாகம்மாள் வீட்டுக்கு வந்து மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதுபற்றி ஒரத்தநாடு போலீசில் நேற்று காலை நாகம்மாளின் மூத்த மகள் மாரியம்மாள் புகார் கொடுத்தார். ஆனால் இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் தன்னை பற்றி புகார் கொடுத்ததை அறிந்து ராஜேந்திரன், நாகம்மாள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஒரத்தநாடு பத்திரப்பதிவு அலுவலகம் அருகே தனது 3-வது மகள் பாரதியுடன் நாகம்மாள் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.

இதை பார்த்த ராஜேந்திரன் கடும் ஆத்திரம் அடைந்தார். அப்போது மதுபோதையில் இருந்த ராஜேந்திரன், திடீரென அரிவாளால் நாகம்மாள், பாரதியை வெட்டினார். இதில் அவர்களுக்கு தலை, கை, கால்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்த அவர்கள் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத் திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பற்றி ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்..

தலைப்புச்செய்திகள்