Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அத்திவரதர் தரிசனம்: அர்ச்சகர்கள் போலீசார் மோதல்

ஜுலை 17, 2019 05:18

காஞ்சீபுரம்: 17 ஆம் நாளான இன்று அத்திவரதர் மாம்பழ  நிற பட்டுடுத்தி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே பூஜை புனஸ்காரம் செய்யும் அர்ச்சகர்கள், விஐபி தரிசன நுழைவு வாயில் வழியாக, செல்ல முயன்றபோது அங்கிருந்த போலீசார், அடிக்கடி வருவதாக கூறி, அவர்களை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்டு 10 க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பூஜைகளை நிறுத்திவிட்டு அங்கு வந்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சாமி தரிசனம் 20 நிமிடம் நிறுத்தப்பட்டு பக்தர்கள் தவிப்புக்குள்ளானார்கள். அதிகாரிகள் தலையிட்டதால் சமரசம் ஏற்பட்டது. இந்நிலையில், போலி விஐபி தரிசன டிக்கெட்டுடன் நுழைய முயன்றதாக இதுவரை 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது வரை 19 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து உள்ளனர்.
    

தலைப்புச்செய்திகள்