![](admin/uploads/.5fe1b37de591c5.74492906.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் காதலனின் தாயாரை, மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக காதலியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூரைச் சேர்ந்த செல்வி என்பவரது மகன், அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகளுடன் பழகி வந்தார். கடந்த மாதம் இருவரும் வீட்டை விட்டு சென்றுவிட்ட நிலையில், இரு குடும்பத்தினரிடையே விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தமது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த செல்வியை, அங்கு வந்த கொளஞ்சி ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும், செல்வியை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கி, மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. தகலறிந்து வந்த போலீசார் செல்வியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும், கொளஞ்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.