Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் எந்த வழியிலும் இந்திமொழியை நுழைய அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் ஜெயக்குமார்

ஜுலை 19, 2019 11:08

சென்னை: தமிழகத்தில் எந்த வழியிலும் இந்திமொழியை நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

சென்னை ராயபுரம் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்லியில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து கூறுவதற்கு ஜனநாயக ரீதியாக அவருக்கு உரிமை உள்ளது எனவும், அதில் தவறு இல்லை எனவும் குறிப்பிட்டார். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பிசியாக உள்ளதால், வேலூர் மக்களவை தேர்தலில் அவரது கட்சி  போட்டியிடவில்லை என்றார். திமுகவினர் மொழியை வைத்து வியாபாரம் செய்பவர்கள் என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.  

மேலும், தேர்தல் வரை மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்று ஒ.எஸ் மணியன் பேசியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறினார். 

தலைப்புச்செய்திகள்