![](admin/uploads/.60325cf94f39a4.62264406.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: பல்வேறு கொள்ளை மற்றும் மிரட்டல் வழக்கில் தொடர்புடையவர்கள் தஞ்சையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை தாராசுரம் காய்கறி மார்க்கெட் அருகே ரூ.14 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்களை தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் மேற்பார்வையில், டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் , இன்ஸ்பெக்டர் மகாதேவன் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் தஞ்சையில் போலீசார் ரோந்து சென்றபோது ஒரு கும்பல் சிக்கியது. இம்ரான், ஆயில்பாலாஜி, பாட்ஷா, சையது, கண்ணன் ஆகியோரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர் கடந்ந ஆண்டு திருச்சியில் ஒரு கோடி ரூபாய் கொள்ளை போன வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்தது, தனிப்படையினருக்கு பாராட்டும் வெகுமதியும் வழங்கப்பட்டது.
657 கி.மீ., துாரத்திற்கு தொடர்ந்து சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, பின்னர் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.