Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆசிரியைக்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த மாணவர்களின் பெற்றோர்கள்

ஜுலை 23, 2019 10:39

விருதுநகர்: விருதுநகர் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியரை இடமாறுதல் செய்ததை ரத்து செய்யக் கோரி மாணவர்கள், பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

விருதுநகர் மாவட்டம் பேர்நாயக்கன்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வரும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சக்ரதாஸ் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தலைமையாசிரியர் சக்ரதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வேறு பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். 

இதனை அறிந்த பேர்நாயக்கன்பட்டியில் உள்ள பெற்றோர்கள் தலைமையாசிரியர் பணியிட மாறுதலை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 
 

தலைப்புச்செய்திகள்