Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.3,000 கோடி எதிரி சொத்து; உயர்மட்ட குழு அமைப்பு

பிப்ரவரி 19, 2019 07:51

புதுடில்லி: ரூ.3,000 கோடி மதிப்புள்ள எதிரி சொத்துகளை விற்பது தொடர்பாக மத்திய அரசு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் மற்றும் சீனா பிரிவினைகளின் போது, இங்கிருந்து அந்நாட்டுக்கு சென்று குடியேறியவர்களுக்கு, இந்தியாவில் சொந்தமான சொத்துக்கள் தொடர்பான, எதிரி சொத்துக்கள் சட்டத்தில், மத்திய அரசு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், சட்ட திருத்தம் செய்தது. 

இந்நிலையில், 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்துக்களை விற்பது தொடர்பாக, உயர்மட்ட குழுவை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்த சொத்துக்களுக்கு விலை நிர்ணயித்து, அதை விற்பனை செய்யும் நடைமுறையை, அந்த குழு செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்