![](admin/uploads/.61fe0460924cc1.66442860.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: நீலகிரி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை , இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்தவர் லாரன்ஸ் மோகன். இவர் கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில்நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்லது. அவருக்கு பதிலாக அதிமுக செய்தி தொடர்பாளராக வழக்கறிஞர் கோபிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து எடுத்துள்ளனர்.