Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், ஏழு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டதாக, இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம், காட்டுத் தீ சம்பவங்களை, செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணித்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்டால், உடனுக்குடன் மாநில வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, கட்டுப்படுத்த வழிவகை செய்கிறது.இவ்வகையில், தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், தேனி மாவட்டத்தில் நான்கு இடங்கள், கிருஷ்ண கிரியில், இரண்டு இடங்கள், மதுரையில், ஒரு இடம் என, ஏழு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாக, இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் உள்ளூர் வனத்துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.