Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4 கோடியே 50 லட்சம் ரூபாய் மொய் வசூல்

ஜுலை 26, 2019 01:46

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மொய்விருந்து விழாவில் தனிநபர் ஒருவருக்கு 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மொய் வசூலானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மொய் விருந்து விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த மொய் விருந்து விழாவின் மூலம்  ஏழை எளியவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், சிறிது சிறிதாக மொய் செய்து, அதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மொய் விருந்து வைத்து இந்த பணத்தை பெற்றுக் கொள்வார்கள். 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மொய் விருந்து வைத்தார். இதில் அவருக்கு 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மொய் வசூலானது.

இந்த மொய் விருந்து விழாவிற்காக ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி சமையல் செய்து பரிமாறப்பட்டது. 


 

தலைப்புச்செய்திகள்