Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: மலேசியாவில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி 2 சிறுமிகளை கடத்தி விற்க திட்டமிட்ட இரண்டு பேர், போலி ஆவணங்களுடன் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வழியாக மலேசியா செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது வங்கதேசத்தைச் சேர்ந்த மனூன் மிஹா, மாபூர் மசூத் ஆகிய இரு நபர்கள் சமா, யாஸ்மின் என்ற இரு சிறுமிகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்துள்ளனர்.
அவர்களை சோதனை செய்தபோது இரு சிறுமிகளின் பாஸ்போர்ட் போலியானது என தெரியவந்தது. மேலும், தாங்கள் தேனிலவு செல்வதாக கூறி அவர்கள் காண்பித்த திருமண சான்றிதழும் போலி என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 2 சிறுமிகளுக்கும் மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி, அவர்களை விற்க திட்டமிட்டதாக இரு நபர்களும் வாக்குமூலம் அளித்தனர்.
அவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிகளை அழைத்துச் செல்ல அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.