Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

ஜுலை 27, 2019 04:37

திருவள்ளூர்  : திருவள்ளூர் அருகே மப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுச்சேரி பகுதியில் உள்ள புத்தேரியில், மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவக்கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 
 

தலைப்புச்செய்திகள்