Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போதை பவுடர் 3 கிலோ பறிமுதல் 2 பேர் கைது

ஜுலை 27, 2019 04:52

சென்னை:  செங்குன்றம் நெடுஞ்சாலை சிக்னல் அருகே போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பைக்கில் வந்த 2 பேரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது, ஆப்கானிஸ்தான் என எழுதப்பட்ட கவரில் வெள்ளை நிற போதை பவுடர் 3 கிலோ இருப்பது தெரிந்தது. இதையடுத்து, பைக்குடன் அவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரைப்பட்டு திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சகில் அகமது (22), புழல் காவாங்கரை குருசாந்தி தெருவை சேர்ந்த சிராஜூதீன் (20) என்பது தெரியவந்தது. இவர்கள், திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் கூட்டு சாலையை சேர்ந்த விஜி (27) என்பவரிடம் போதை பவுடர் வாங்கி, சென்னை வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்த சசி (21) என்பவருக்கு கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து சகில் அகமது, சிராஜூதீன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான விஜய், சசி ஆகியோரை தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்