Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவில் மேலும் 14 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம்

ஜுலை 28, 2019 08:14

பெங்களூரு: கர்நாடகாவில் சில நாட்களுக்கு முன்னர் 3 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 14 எம்எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்., கூட்டணி ஆட்சி, கடந்த, 14 மாதங்களாக நடந்து வந்தது. இம்மாத துவக்கத்தில், காங்., மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் சுயேட்சைகள் என 19 எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பதவியை ராஜினாமா செய்தனர். நீண்ட இழுபறிக்கு பின், 23ம் தேதி, சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. முதல்வராக, பா.ஜ., வை சேர்ந்த எடியூரப்பா நேற்று முன்தினம்(ஜூலை 26) பதவியேற்று கொண்டார். நாளை அவர், தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க உள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்களில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமடஹள்ளி மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ., சங்கர் ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் உட்பட 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, தகுதி நீக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்