Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பணத்திற்காக பெற்றோர்களை கொன்ற மகன்

ஜுலை 28, 2019 08:31

ஆந்திரா: ஆந்திராவில் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக பெற்ற தாய், தந்தையையே மகன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஓங்கோலில்  வெங்கட் ரெட்டி , ஆதியம்மா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களின் மகன்  நாராயண ரெட்டி  தரிசியில் உள்ள  தனியார் நிதி நிறுவனம்  ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மதுப் பழகத்திற்கு அடிமையான நாராயண ரெட்டி,  மதுக்குடிக்க பணம் கேட்டு வீட்டில் உள்ளவர்களை, அடிக்கடி தொந்தரவு செய்து வந்தததாகக் கூறப்படுகிறது. இதனால் நாராயண ரெட்டியின் மனைவி அன்னபூர்ணா, கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

மேலும் மது அருந்துவதற்காகவும் வெளியிடங்களில் வாங்கிய கடனுக்காக தான் பணிபுரியக்கூடிய நிதி நிறுவனத்திலும், நாராயண ரெட்டி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த நிறுவனத்திடமிருந்து ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க திட்டமிட்ட நாராயண ரெட்டி, தனது தாய் மீது தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 15 லட்ச ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். 

இந்நிலையில்  கடந்த 21-ஆம் தேதி நாராயணரெட்டி தனது தாய் ஆதியம்மாவிற்கும் தந்தை வெங்கட் ரெட்டி விற்கும், அதிக அளவு தூக்க மாத்திரை கொடுத்து கொல்ல முயன்றுள்ளார். அவர்கள் இறக்காததையடுத்து, பெற்ற தாய், தந்தை என்றும் பாராமல், அவர்கள் கழுத்தை அறுத்து நாராயண ரெட்டி கொன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனது தாய் தந்தையை கொலை செய்து, வீட்டில் இருந்த ஐந்து ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக நாடகமாடினார் நாராயண ரெட்டி. இதுகுறித்து தரிசி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். 

ஆனால் விசாரணையில் உண்மை அம்பலமானது. இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற தாய், தந்தையை கொன்றுவிட்டு நாராயணரெட்டி நாடகமாடியதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை கைது செய்த போலீசார், அவர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை  பறிமுதல் செய்தனர். இன்சூரன்ஸ் பணத்துக்காக தாய் தந்தையை கொலை செய்த சம்பவம் ஓங்கோலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்புச்செய்திகள்