Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆளில்லா உளவு விமானங்கள் வாங்க இந்திய முப்படைகள் மறுபரிசீலனை

ஜுலை 28, 2019 08:39

புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து பிரிடேட்டர் – B என்ற ஆயுதம் தாங்கிய 20 ஆளில்லா விமானங்கள் மற்றும் 10 உளவு விமானங்களை வாங்க இந்திய முப்படைகள் திட்டமிட்டிருந்தன. 41 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் பாரசீக வளைகுடாவில், அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானமான குளோபல் ஹாக்-கை ஈரான் சுட்டு வீழ்த்தியதால், இந்தியா தனது முடிவில் இருந்து பின் வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தற்காப்புத் தன்மை குறித்து இந்தியா கவலை எழுப்பி உள்ளது,. ஆளில்லா விமானங்களின் விலையும் இந்தியாவை கவலை கொள்ளச் செய்யும் வகையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா விமானம் ஒன்றின் விலை சுமார் ஆயிரத்து 300 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. இது ரபேல் போர் விமானத்தின் விலையை காட்டிலும் அதிகம் என்று கூறப்படுகிறது. 

இது மட்டும் அல்லாமல், தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை அமைப்புகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் உள்ளதால், அந்நாடுகள் உடனான எல்லைகளில், ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக கருதப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ.. அரசிடம் முன்மொழிவு கொண்டு செல்லப்பட்டால் மட்டுமே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்