Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சிவகங்கை: சிவகங்கை அரசு அலுவலகத்தில், ஊழியர்கள் சிலர் மது அருந்துவது போன்று வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், ஊழியர்கள் சிலர் விடுமுறை நாட்களில் மது அருந்துவதாக, ஏற்கனவே புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் மீதான நடவடிக்கை இன்னும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்ததுள்ளது.
இந்நிலையில், சிவகங்கையில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வானிப கழகத்தின் மண்டல மேலாளர் அலுவலகத்தில், ஊழியர்கள் சிலர் கையில் பீர் பாட்டில்களுடன் இருப்பது போன்றும், மது அருந்துவது போன்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அத்துமீறிய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.