Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.1.81 லட்சம் வழிப்பறி

ஜுலை 29, 2019 05:41


தஞ்சாவூர் : பாபநாசத்தில் 'டாஸ்மாக்' ஊழியரை அரிவாளால் வெட்டி, 1.81 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள திருப்பாலத்துறை, டாஸ்மாக் கடையில், சூப்பர்வைசராக இருப்பவர், இளங்கார்குடியைச் சேர்ந்த சிவராமன், 50. இவர், நேற்று முன்தினம் இரவு, விற்பனை பணத்துடன், 11:00 மணிக்கு, பைக்கில், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

பாபநாசம் படுகை புதுத்தெரு அரசலாற்றின் தென்கரையில், நின்று கொண்டிருந்த மூவர், பைக்கை மறித்து, சிவராமனின் தலையில் அரிவாளால் வெட்டி, அவர் வைத்திருந்த, 1.81 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றனர். இது குறித்து பாபநாசம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்