![](admin/uploads/.5d57a1cd00ef78.82620114.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சேலம்: கேரளா மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள நகைக் கடையில் நகைகளை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி வந்த 4 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த கணபதியாதவ், பிரசாத் யாதவ், ஆதாஷ் கார்க், தாதாசாகிப் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். நகைகளுடன் தப்பியோடிய நித்தின் யாதவ் என்பவரை பிடிக்க கொண்டலாம்பட்டி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பிடிப்பட்ட இவர்கள் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள நகைக் கடையில் புகுந்து 4கிலோ நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துவிட்டு சொகுசு காரில் தப்பியவர்கள். இது குறித்து கேரள போலீசார் அளித்த தகவலை அடுத்து சேலம் கொண்டலாம்பட்டி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மராட்டிய மாநிலம் பதிவு எண் கொண்ட சொகுசு காரை மடக்கி சோதனையிட்டபோது, பத்தனம்திட்டாவில் கொள்ளையை அரங்கேற்றிய கொள்ளையர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் வந்த சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.