Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமித்ஷாவுடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு

ஜுலை 29, 2019 12:49

புதுடெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அற்புதம்மாள் மனு அளித்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, தமது மகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, அற்புதம்மாள் போராடி வருகிறார். 

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து, அற்புதம்மாள் மனு அளித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அந்த கட்சியின் எம்பி ரவிக்குமார் ஆகியோர், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

தலைப்புச்செய்திகள்