Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்

ஜுலை 29, 2019 01:21

சென்னை: திருவொற்றியூர் மணலி புதுநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு புதிதாக மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி இப்பகுதியில் புதிய கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணலிபுதுநகர் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தலைப்புச்செய்திகள்