![](admin/uploads/.5e4a8f07569cc7.52715258.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே சொந்த பேத்தியையே பாலியல் வன்கொடுமை செய்த தாத்தாவிற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் பகுதியை சேர்ந்தவர் இருதயதாசன் வயது 58. இவர் கடந்த 02.01.2016 எல் தனது எட்டு வயது பேத்தி உட்பட மூன்று குழந்தகளுடன் அருகிலுள்ள மணக்குடி கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகள் கடல் மணலில் விளையாடி கொண்டிருந்த போது, தனது மகனின் 8 வயது குழந்தையை ( பேத்தியை) மறைவான இடத்தில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருதயதாசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதய தாசனுக்கு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜான் ஆர் டி. சந்தோசம் இன்று தீர்ப்பு கூறினார்.