Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரெயிலின் மேல் படுக்கையில் இருந்து கீழே விழுந்த பெண் பலி

ஜுலை 30, 2019 04:35

பெங்களூரு: மும்பையில் இருந்து பெங்களூரு செல்லும் உதயம் எக்ஸ்பிரசில் சரஸ்வதி(40) என்பவர் பயணம் செய்தார். இவர் ரெயிலின் ஏசி கோச்சில் டிக்கெட் புக் செய்துள்ளார். 

இவருக்கு அந்த கோச்சில் மேல் படுக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். ரெயில், பெங்களூருவை நெருங்கியதும் அவர் உடமைகளுடன் கீழே இறங்க முற்பட்டுள்ளார். 

இறங்கும்போது கால் தவறியதால் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள்து. இச்சம்பவம் குறித்து ரெயில்வே துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து ரெயில் நிலையத்தில் மருத்துவ குழுக்கள் தயாராக இருந்தன. ரெயில் வந்தவுடன் சரஸ்வதிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

முதல்கட்ட சிகிச்சையின்போது சுயநினைவுடன் இருந்த சரஸ்வதி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மயங்கி சுயநினைவை இழந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். 

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், 'முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டபோது உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லும் அளவுக்கு தெளிவாகத்தான் பேசினார். தலையில் உள்காயம் பலமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே உயிரிழந்தார்' என கூறியுள்ளனர். 

தலைப்புச்செய்திகள்