![](admin/uploads/.618a32ef32a9d7.73144182.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சியில் தாயின் பொறுப்பற்ற செயலால் 7 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது 7 வயது மகளுடன் வசித்து வருகிறார். மேலும் இந்த கிராமத்தில் மழை பெய்ய வேண்டி அர்ஜுனன் தவசு என்ற நாடகம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து இந்த நாடகத்தை பார்ப்பதற்காக அந்த சிறுமியின் தாய் உறங்கி கொண்டிருந்த தன்னுடைய மகளை வீட்டு வாசலில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து சிறுமி அழுத்தவாறே நாடகம் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார். இதை அடுத்து சிறுமியின் உடைகளில் ரத்தம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த தாய் தனது மகளை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். சிறுமி பலாத்காரம் தொடர்பாக சோதனை செய்த மருத்துவர்கள் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே சிறுமியின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை சீரழித்த காமுகனை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர். இதை தொடர்ந்து பெற்ற குழந்தைகளை விட சினிமா, நாடகம் எனும் மோகத்தில் பித்து பிடித்திருக்கும் தாய்மார்களுக்கு இந்த சம்பவம் ஒரு மோசமான முன் உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.