Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு

ஆகஸ்டு 02, 2019 04:40

வேலூர்: வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வரும் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதி நடைபெறும்.

இதற்கிடையே, வேலூர் தேர்தல் பற்றி ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார் என புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நேற்று சென்று மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில், ஆம்பூரில் தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

வட்டாட்சியர் சுஜாதா கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்