![](admin/uploads/.5fbf3acb4497d5.19722816.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சிவகங்கை:பொன்னமராவதி அருகே பள்ளியில் வெடிபொருள் வெடித்ததில் இரண்டு பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் சிறுவர்கள் 2 பேர், மின்னல்குடி கிராமத்தில் உள்ள கண்மாயில் கிடந்த மர்மபொருளை பள்ளிக்கு எடுத்து வந்துள்ளனர்.
பின்னர் பள்ளி மாடிக்கு சென்ற சிறுவர்கள் மாடியில் வைத்து அந்த வெடிபொருட்களை பேட்டரி மூலம் இணைத்து விபரீத சோதனையில் ஈடுபட்டதாக கூறுகிறது. அப்போது எதிர்பாராமல் அந்த வெடி பொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்ததில் சிறுவர்கள் இருவரது கைவிரல்கள் சிதைந்து படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்