Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்: 3 வாலிபர்கள் பலி

ஆகஸ்டு 03, 2019 12:26

ஸ்ரீபெரும்புதூர்: நெல்லையை சேர்ந்த ரிதீஷ், அரியலூரை சேர்ந்த சந்திரஜீத், சிவகங்கையை சேர்ந்த வினோத்குமார் ஆகியோர் படப்பையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒரடகத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

நேற்றுமாலை வேலை முடிந்து 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஒரகடத்தில் இருந்து படப்பை நோக்கி சென்றனர். அப்போது எதிரே வந்த தனியார் கம்பெனி பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரிதீஷ்,சந்திரஜித் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வினோத்குமார் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை தனியார் ஆஸ்பத்திரில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக பலியானார். இது இறித்து தகவல் அறிந்த ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடிவருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்