![](admin/uploads/.62861f58d5fc54.73488338.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் அதிகாலை 1 மணிக்கு வேகமாக காரை ஓட்டி வந்த ஐஏஎஸ் அதிகாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். விபத்தை ஏற்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன், பெண் தோழி ஒருவருடன் காரில் வந்த போது குடிபோதையில் காரை ஓட்டி வந்தது, அவரிடம் நடத்தப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் தெரிய வந்துள்ளது. இவருக்கு கடுமையான தண்டனை வழங்க பல்வேறு அரசியல் கட்சியினரும், பத்திரிக்கையாளர் சங்கத்தினரும் வலியுறுத்தி உள்ளனர்.