Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போளூர் அடுத்த குருவிமலையில் கார் பைக் - மோதியதில் ஒருவர் பலி

ஆகஸ்டு 04, 2019 03:08

திருவண்ணாமலை: போளூர் அடுத்த குருவிமலையில் கார் பைக் - மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த முருகாபாடியை சேர்ந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

போளூர் அடுத்த முருகாபாடியை சேர்ந்தவர் ரேணு. இலருடைய மகன் செந்தில்குமார்(வயது30). விவசாயி.இவரும் இவரது நண்பர் அதே ஊரைச்சேர்ந்த வெங்கடேசன் மகன் நாராயணன்(30).திருப்பூரில் பனியன் கம்பெனியில்  தையல்காரராக உள்ளார். இருவரும் கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா கீழ்கரிப்பூர் கிராமத்திற்கு  இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு முருகாபாடி திரும்பிக்கொண்டிருந்தனர்.

போளூர் அருகே உள்ள குருவிமலை கிராமத்தை கடந்து வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் வேகமாக மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். நாராயணன் பலத்த காயத்துடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.    காரை ஓட்டி வந்த   சின்னசேலம் தாலுக்கா,கல்லந்த்தம் கிராமத்தைச்சேர்ந்த ரங்கசாமி மகன் சண்முகசுந்தரம் தனது குடும்பத்துடன் காரில்  திருப்பதி சென்றுவிட்டு திரும்பும்போது இச்சம்பவம் நடைபெற்றது.

இதுகுறித்து புகாரின் பேரில் கலசபாக்கம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்