Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் அரசுப் பள்ளியில் மக்களவைத் தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திருட்டு

ஆகஸ்டு 04, 2019 04:34

வேலூர்: வேலூர் குடியாத்தம் காந்திநகர் அரசுப் பள்ளியில் பூட்டை உடைத்து சிசிடிவி கேமராக்கள் மர்மநபர்களால் திருடப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தேர்தலுக்காக பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திருடப்பட்டது. மேலும் தொடக்கப்பள்ளியில் இருந்த 10 கணினிகள் மற்றும் ஒரு ஜெராக்ஸ் இயந்திரமும் திருட்டு போனது. சிசிடிவி கேமராக்கள், கணினிகளை திருடிச்சென்ற நபர்கள் குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்