Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மெரினாவில் இரவு நேரங்களில் தொடரும் பைக் ரேஸ்

ஆகஸ்டு 04, 2019 06:54

சென்னை: சென்னையில் இரவு நேரங்களில் போலீசாரின் வாகன சோதனைகளையும் மீறி, மெரினாவில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று காவல்துறையினர் நடத்திய சிறப்பு வாகன சோதனையில், 41 ஆயிரத்து 769 வழக்குகள் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், மெரினா அருகே காமராஜர் சாலையில், நள்ளிரவில் திரண்ட 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக ரேஸ் ஒட்டி அப்பகுதி வழியாக பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு பீதியை ஏற்படுத்தினர். 

தொடர்ந்து அவர்கள் சாகசங்களிலும் ஈடுபட்டனர். ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரங்களில் இது போன்ற பைக் ரேஸ்கள் நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். 

தலைப்புச்செய்திகள்