Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹெல்மெட் போடாதவர்களுக்கு லட்டு கொடுத்து விழிப்புணர்வு - போலீசாருக்கு பாராட்டு

ஆகஸ்டு 04, 2019 07:39

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் போடாமல் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தினர்.

அங்கிருந்த போலீசார் ஹெல்மெட் போடாமல் வந்த வாகன ஓட்டியிடம், லட்டு ஒன்றைக் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து பேசிய போலீசார், இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அன்பாக எச்சரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்