![](admin/uploads/.621f6a5c6fa185.62096374.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் காவலரை வெட்டிய வழக்கில் தொடர்புடைய ரவுடியை குடிபோதையில் அவரது நண்பர்களே கொலை செய்துள்ளனர். நெற்குன்றத்தில் அட்டை தொழிற்சாலை அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செயப்பட்டது திருவேற்காட்டை சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது.
இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுப்பட்டதால் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட ரஞ்சித் கட்டுப்பக்கத்தில் போலீஸ் ஏட்டு அன்பழகனை அரிவாளால் வெட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.