Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு பாய்ந்ததால் ஆடிப் பெருக்கு விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
ஆனால் இந்தாண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி ஆறு வறண்டு காணப்படுகிறது.
இதனால் காவிரிக் கரைகளில் ஆடிப் பெருக்கு விழா களை இழந்தது. எனினும் தண்ணீர் நிரம்பியுள்ள மகாமகக் குளக்கரைகளில் புதுமணத் தம்பதியினர் பழங்கள் வைத்து வழிபட்டு புது திருமாங்கல்யம் மாற்றிக் கொண்டனர்..
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கும் மஞ்சள் கயிறு அணிவித்தனர்