Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெ.தீபா பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் புகார்

ஆகஸ்டு 05, 2019 11:30

சென்னை: தன்னுடைய பேரைவையை கலைத்து அதிமுக உடன் இணைக்கும் முடிவால் அதிருப்தி அடைந்த சிலர் தமக்கும், கணவர் மாதவனுக்கும் அச்சுறுத்தல் விடுப்பதாக ஜெ.தீபா போலீஸில் புகார் அளித்துள்ளார். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அரசியலில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார். இதற்கு ஜெ. தீபா தன் பேரவையை கலைத்து விட்டு அதிமுக வில் இனையவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் - அம்மா - தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்கும் முடிவை விரும்பாத சிலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தரக்குறைவாக பேசுவதாக புகார் தெரிவித்துள்ளார், 

மேலும் தமக்கும், கணவர் மாதவன் மற்றும் தங்களது இல்லத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் ஜெ.தீபா, ஆடியோ வடிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.. 
 

தலைப்புச்செய்திகள்