![](admin/uploads/.64a65f8c106cd1.90711047.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் தொடர்பான வரலாற்று சிறப்பு மிக்க மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருப்பதை மத்திய அரசு கொண்டாடும் வகையில், நாடாளுமன்றம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370-தை நீக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதை கொண்டாடும் விதமாக பலவண்ண விளக்குகளால் நாடாளுமன்ற கட்டிடம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு குஜராத்தில் மாணவர்கள் மனித சங்கிலி அமைத்து வரவேற்பளித்தனர். தூதரகத்தில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண குருகுலம் பள்ளி மாணவர்கள் 370 வடிவில் தேசியக்கொடியை கையில் பிடித்துக்கொண்டு மனிதசங்கிலி இட்டு நடனமாடினார். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.