Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோசடி: முன்னாள் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் உட்பட 3 பேர் கைது

ஆகஸ்டு 06, 2019 07:02

கோவை: கோவை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கணபதி பகுதியில் பிரின்ஸ் டேனியல் என்பவருக்கு சொந்தமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முன்னாள் ரஜினி மக்கள் மன்ற இளைஞரணி செயலாளரான பிரின்ஸ் டேனியல், வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து ஏராளமான இளைஞர்களிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

எனினும், அந்த இளைஞர்களை வெளிநாடுகளுக்கும் அனுப்பாமல், பணத்தையும் திரும்பி தராததால் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பிரின்ஸ் டேனியல்,மேலாளர் விக்னேஷ் மற்றும் அருண் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 26 இளைஞர்களின் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர். 


 

தலைப்புச்செய்திகள்