![](admin/uploads/.5d95f0f87a2545.92703684.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தெஹ்ரி: இன்று காலை உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கார்வால் பகுதியில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனம் ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த 10 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் அனைவரும் கங்சாலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அனைவரும் 4 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.