![](admin/uploads/.5f6da8c3498b53.10328268.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி : கடந்த ஓராண்டிற்குள் டில்லியின் முன்னாள் முதல்வர்கள் 3 பேர் திடீரென மரணமடைந்துள்ளது டில்லி மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.
1998 ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை டில்லியின் முதல்வராக இருந்த சுஷ்மா சுவராஜ், நேற்று (ஆக.,06) இரவு மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் இன்று (ஆக.,07) நடைபெற உள்ளது.
இதே போன்று டில்லியில் 3 முறை முதல்வராக இருந்த காங்., ன் ஷீலா தீட்சித் ஜூலை மாத மாரடைப்பால் காலமானார். ஷீலா தீட்சித்தும், சுஷ்மா சுவராஜூம் ஒரு மாத காலத்திற்குள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1993-96 வரை டில்லி முதல்வராக இருந்த மதன்லால் குரானா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார்.