Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரயிலில் இருந்து தள்ளி சென்னை வாலிபர் கொலை: விக்கிரவாண்டியில் பயங்கரம்

ஆகஸ்டு 07, 2019 05:25

விக்கிரவாண்டி:  கடலூர்  மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி அந்தேரிமேடு பகுதியை  சேர்ந்தவர் தெய்வசிகாமணி மகன் உமாநாத் (28). சென்னையில் ஒரு தனியார்  நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 3ம்தேதி இரவு தனது ஊருக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார்.   திண்டிவனம் அடுத்த பேரணி ரயில்வே சங்கராபரணி ஆற்று பாலத்தில் ரயில் வந்தபோது அந்த வாலிபர் திடீரென கீழே விழுந்து விட்டார்.

இதனை கண்டு உடன் வந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்ததும், இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் பயணிகள் தெரிவித்தனர்.மேலும் சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பிடித்து விழுப்புரம் ரயில்வே போலீசிடம் பயணிகள்  ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மதுரையை சேர்ந்த முத்தரசன் (40) என்பதும்,  உமாநாத்துடன் தகராறு செய்து ரயிலில் இருந்து கீழே தள்ளி  விட்டதும்  தெரியவந்தது. இதையடுத்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து    முத்தரசனை  கைது செய்தனர். மேலும் உயிரிழந்த வாலிபரின் உடலை  அவரது பெற்றோரிடம்  ஒப்படைத்தனர்.

தலைப்புச்செய்திகள்