![](admin/uploads/.5ee70fb477f815.64074991.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரையில் நடிகர் அஜித்குமாரை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் நடித்துள்ள படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக உள்ளது இப்படம்.
ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். ரீமேக் படமாக இருந்தாலும், அஜித் ரசிகர்களுக்காக படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அஜித் ரசிகர்கள் நேர்கொண்ட பார்வை படம் வெளியாவது தொடர்பாக பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுவாரசியமான சுவரொட்டிகளை மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ளனர். இந்நிலையில் அவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டி ஒன்றில் "நாளைய நாடாளுமன்றமே" என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகளும் மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
அரசியலில் ஆர்வம் காட்டாத நடிகர் அஜித்தின் திரைப்படத்திற்கு இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டி இருப்பது மக்கள் மத்தியில் சற்று பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.