Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிஷப்புக்கு எதிராக போராடிய கேரள கன்னியாஸ்திரி நீக்கம்

ஆகஸ்டு 08, 2019 03:54

கொச்சி: கேரளாவில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி லக்கி கலப்புரா 'பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை'யிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த பிஷப் பிராங்கோ என்பவர் கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் சிக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேரளா முழுவதும் போராட்டங்கள் நடந்தன.கேரளாவைச் சேர்ந்த லக்கி கலப்புரா என்ற கன்னியாஸ்திரியும் மேலும் சில கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில் லக்கி கலப்புராவின் வாழ்க்கை முறை குறித்து புகார் கூறப்பட்டது. இதையடுத்து ரோமன் கத்தோலிக்க தேவாலாயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையிலிருந்து இது குறித்து விளக்கம் அளிக்கும்படி லக்கி கலப்புராவுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இந்நிலையில் லக்கி அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என கூறி அவரை சபையிலிருந்து நீக்குவதாக நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது குறித்து லக்கி கலப்புரா கூறுகையில்''சபை எடுத்த நடவடிக்கை 100 சதவீதம் தவறானது. இதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன்'' என்றார்.

தலைப்புச்செய்திகள்