Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காதல் விவகாரம்: இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

ஆகஸ்டு 08, 2019 04:23

திருச்சி: திருச்சி திருவானைக்கோவில் பகுதியில், காதல் விவகாரத்தில், ஒரு இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டும் காட்சி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி திருவானைக்கோவில் திம்மராயர் சமுத்திரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். கட்டடத் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரின் தங்கையை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, மணிகண்டனுக்கும், சிவாவுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பாரதி பிரிவு என்ற இடத்தில் நின்றுகொண்டிருந்த மணிகண்டனை, 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி தாக்கியது. 

பின்னர், மணிகண்டனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இது தொடர்பாக நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.இந்த தாக்குதலில், பலத்தக் காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தலைப்புச்செய்திகள்