![](admin/uploads/.60a4a6674e7bf4.32629654.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் 138 பயணிகள் 5 ஊழியர்கள் உள்பட 143 பேர் இருந்தனர். விமானத்தை கீழே இறக்க விமானி முற்பட்டபோது விமானத்தின் சக்கரம் இயங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.
எனவே விமானி வானத்தில் வட்டமடித்தார். சக்கரத்தை இயக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து விமான இறங்கு தளத்தில் தீயணைப்பு வண்டிகள், வீரர்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அதிரடி படையினரும் குவிக்கப்பட்டார்கள்.
அசம்பாவிதம் ஏற்பட்டால் பயணிகளை மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் விமானம் தரை இறக்கப்பட்டது. அப்போது திடீர் என்று விமானத்தின் சக்கரம் இயங்கத் தொடங்கியது.
எனவே விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது. அதில் இருந்த 143 பேரும் உயிர் தப்பினார்கள். அதன் பிறகே அங்கு நின்றவர்களும், விமானத்தில் இருந்தவர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த சம்பவத்தால் சென்னை விமானம் நிலையம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.