Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: காஷ்மீர் விவகாரத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வரும் சூழலில், மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில், மதிமுக பொதுச்செயலர் வைகோ, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வைகோ மீது காங்கிரஸ் வைத்துள்ள கடும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் கட்சியின் வளர்ச்சி குறித்தும், உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், வைகோவின் நடைபயண திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில், நடைபயணத்தை எப்போது தொடங்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது.