Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீர் பிரச்சனை: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

ஆகஸ்டு 10, 2019 01:23

சென்னை: காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், வி.சி.க தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளனர். திராவிடர் கழகம் சார்பில் கலி.பூங்குன்றன், மனித நேய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் தமுமின் அன்சாரியும் பங்கேற்றுள்ளனர். 

காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, கோபண்ணா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை அண்மையில் மத்திய அரசு நீக்கியது. ஜம்மு- காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்