Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரியமேடு லாட்ஜில் ரெயில்வே பெண் ஊழியர் அடித்துக் கொலை: கள்ளக்காதலன் கைது

ஆகஸ்டு 11, 2019 01:10

சென்னை: சென்னை பெரியமேடு வி.வி.கோவில் தெருவில் உள்ள லாட்ஜில் நேற்று மதியம் கணவன்- மனைவி என்று கூறிக்கொண்டு 2 பேர் அறை எடுத்து தங்கினார்கள். நேற்று இரவு நீண்ட நேரமாக இவர்கள் தங்கி இருந்த அறையின் கதவு திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இரவு 10.30 மணி அளவில் அறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மாற்று சாவியால் திறந்து உள்ளே சென்றனர். அங்கு லாட்ஜில் தங்கி இருந்த பெண் மட்டும் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடன் தங்கிய நபரை காணவில்லை.இதுபற்றி உடனடியாக பெரியமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்லப்பா விரைந்து சென்று தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

இறந்துபோன பெண்ணின் முகத்தில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.அவர் யார்? அவருடன் தங்கிய வாலிபர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மோகனா என்பது தெரிய வந்தது.38 வயது ரெயில்வே ஊழியரான இவர் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் பணி புரிந்து வந்தார். ரெயிலுக்கு கொடிகாட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். திருவொற்றியூர் ரெயில்வே குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

மோகனாவின் நடவடிக்கைகளில் வீராசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. வேறு ஒருவருடன் அவருக்கு 3-வதாக தொடர்பு இருப்பதாக கருதினார். இதுபற்றி மோகனாவிடம் கேட்டார். அப்போதுதான் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. வீராசாமியின் பேச்சை மோகனா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வீராசாமி மோகனாவின் முகத்தில் சரமாரியாக கையால் குத்தியதுடன், அறையில் வைத்து அடித்து உதைத்தார். மோகனாவின் உடலில் பல இடங்களில் சரமாரியாக எட்டி உதைத்தார். கடித்தும் வைத்தார்.

இதனால் நிலைகுலைந்த மோகனா வலி தாங்க முடியாமல் அலறியபடியே மயங்கி விழுந்தார். பின்னர் சிறுது நேரத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் மோகனா தற்கொலை செய்து கொண்டதுபோல நாடகமாட நினைத்த வீராசாமி மோகனாவின் கழுத்தில் சேலையால் இறுக்கி தூக்கில் தொங்கவிட்டார். பின்னர் பயந்துபோய் அறை கதவை பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

மோகனாவின் உடலை கைப்பற்றிய போலீசார் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கள்ளக்காதலன் வீராசாமியை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருவொற்றியூர் பகுதியில் பதுங்கி இருந்த வீராசாமியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைதான வீராசாமி, போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

மோகனா, கணவருக்கு துரோகம் செய்துவிட்டு எனக்கும் துரோகம் செய்தார். இதுபற்றி கேட்ட போது திமிராக பேசினார். செல்போனில் நீண்ட நேரம் பேசுவார். அதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

இதனால் என்னை விட்டு விட்டு வேறு யாருடனும் சென்றுவிடுவாளோ? என்று பயந்தேன். இதனால்லாட்ஜில் வைத்து கொலை செய்ய முடிவு செய்தேன். கழுத்தை நெரித்து, வேட்டியால் கழுத்தை இறுக்கினேன். பின்னர் சேலையால் கழுத்தை கட்டி தூக்கில் தொங்கவிட்டேன்.

இவ்வாறு வீராசாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்