![](admin/uploads/.5f4f48e5d7a600.79878634.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் ஜாகுவார் என்ற சரக்கு கப்பல் இன்று காலை 11.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. இதனால், கப்பலில் இருந்த பணியாளர்கள் 29 பேர் உயிரை காக்க கடலில் குதித்தனர்.
கடலில் தத்தளித்த அவர்களில் 28 பேரை கடலோர காவல் படை மீட்டது. காணாமல் போன ஒரு பணியாளரை கடலோர காவல் படை தேடி வருகிறது. மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.